நாணயம் விகடன் இதழிலிருந்து ..
'பிஸினஸில் தோல்வியைச் சந்திக்க பத்து விதிகள்’
கோகோ-கோலா கம்பெனியின் முன்னாள் தலைவர் டொனால்ட் ஆர் கியோக் எழுதிய புத்தகம்.இவற்றை பின்தொடர்ந்தால் தோல்வி நிச்சயம் என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் டொனால்ட்.
1. ரிஸ்க் எடுப்பதை நிறுத்திவிடுங்கள்.
2. மாற்றங்கள் எதையும் செய்யாமல் பிடிவாதமான குணத்துடன் இருங்கள்.
3. மேனேஜரோ/சிஇஓ-வோ உங்கள் நிறுவனத்தில் இருப்பவர்கள் யாரிடமும் பேசாமல், பழகாமல் தனிமையில் வாழுங்கள்.
4. நான் தவறே செய்ய மாட்டேன் என்ற இறுமாப்புடன் இருங்கள்.
5. தவறாகப் போய்விடும் வாய்ப்பிருக்கும் ரேஞ்சிலேயே உங்கள் தொழிலை எப்போதும் நடத்திச் செல்லுங்கள்.
6. எதையும் யோசித்து செய்யாதீர்கள்.
7. வெளியாட்களின் சிறப்பறிவை (எக்ஸ்பர்ட்டைஸ்) மட்டுமே முழுமையாக நம்பியிருங்கள்.
8. உங்களை அதிகாரக் குவியலின் மையமாக்கிக் கொண்டு என்னைக் கேட்டுத்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்லுங்கள். உங்கள் அதிகாரத்தை ரசித்து அனுபவியுங்கள்.
9. வரும், ஆனா வராது; கிடைக்கும், ஆனா கிடைக்காது போன்ற குழப்பமான தகவல்களையே உங்களின் கீழ் இருப்பவர்களுக்கு அனுப்புங்கள்.
10. எதிர்காலத்தை நினைத்து எப்போதுமே பயத்துடன் செயல் படுங்கள்.
பொன் போன்ற இந்த விதிகளை ஞாபகம் வைத்து , இவற்றை தவிர்த்து வாழ்விலும்,தொழிலிலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் .